Skip to main content

Posts

Showing posts with the label என் கள்வனின் கவிதைகள்

வேறென்ன வேண்டும் எனக்கு?

வேண்டும் எனக்கு... தலை சாய உன் மடி தாலாட்ட உன் கரம் கவிபாட உன் கண்கள் கண்விழிக்க உன் முகம் செவிகொடுக்க உன் மெட்டி ஒலி கை பிடிக்க உன் விரல் சிரிக்க உன் சிறு அழுகை சிந்திக்க உன் சிறு கோபம் சிலிர்க்க உன் பெரும் துணிச்சல் குறைசொல்ல உன் குறும்பு குழம்பிப்போக உன் மௌனம் மௌனம் கொள்ள உன் முத்தம் இளைப்பாற உன் அணைப்பு உயிர் வாழ உன் நினைப்பு வேறென்ன வேண்டும் எனக்கு

மறக்க முடியாத ஒரு ஜீவ

நான் அழும்போதெல்லாம் அரவணைக்கும் இன்னொரு ஜீவன். நான் சொல்வதை சரிஎன்பால் ஒருத்தி. நான் சொல்வதுதான் சரிஎன்பால் ஒருத்தி. நான் தவறு செய்தால் அடிப்பேன் என்பாள் ஒருத்தி. அடிக்காதே பாவம என்பாள் ஒருத்தி. நான் கேட்க்கும்போதேல்லாம் எதெற்கு உனக்கு காசென்பால் ஒருத்தி. நான் கேட்காமல் கொடுப்பாள் ஒருத்தி. நான் உண்பதற்கு அதிகம் தின்பண்டங்கள் கொடுத்தவள்., என்னை அதிக நேரம் தூக்கிச்சுமந்தவள், எல்லோரிடமும் என்னைக்காட்டி பெருமிதம் கொண்டவள், என்னைக் காண பொடிநடையாய் ஓடி வருபவள், அசை போட பல உண்டு. என் அன்னையை விடவும் அதிக முத்தம் கொடுத்தவள். அவள் தான் என் பாட்டி. அன்னையை விடவும் பாட்டிக்கு பாசம் அதிகமோ? அவளுக்கு நான் தந்த மிக உயர்ந்த பரிசு, அவளை நான் கொள்ளுப்பாட்டியாக்கி அழகு பார்த்தது தான். என்ன ஆனந்தம் அவளுக்கு! அவளின் மரணச்செய்தி என்னை பாதிக்க வில்லை. ஆனால் அவள் உயிரின்றிக்கிடந்தது என்னை மிகவும் பாதித்தது. என் தொண்டை எச்சில் விழுங்க மறுத்தது என் கண்ணில் நீர் பெருகி குளமாகியது. என் சிறுவயதில் அவளோடு இருந்த ஞாபகங்கள்... வருசையின்றி ஒன்றுக்கு முன் ஒன்று, ஒன்று முடிவதற்குள்