Skip to main content

Posts

Showing posts with the label தமிழ் பாடல் வரிகள்

Endha oor endravanE - பாடல்: எந்த ஊர் என்றவனே

Movie: Kaattu Roja - திரைப்படம்: காட்டு ரோஜா Singers: P.B. Srinivas, - பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன் Year: - ஆண்டு: 1963   எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!  எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்! கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்! கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன் காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்! வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன் பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்! எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் கன்னியூர் மறந்தவுடன் கட

madi meethu thalai vaiththu - பாடல்: மடி மீது தலை வைத்து

Movie: Annai illam - திரைப்படம்: அன்னை இல்லம் Singers: T.M. Soundararajan, P. Suseela - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் Music: KV. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன் Year: - ஆண்டு: 1963   மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம் மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம் மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம் மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே ஆஹா ஓஹோ ம்ம் மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம் இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம் வாயின் சிவப்பு

சின்னஞ்சிரிய வண்ணப்பறவை - திரைப்படம்: குங்குமம்

பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி ராகம்: தர்பாரி கானடா சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா - அது  இன்னிசையோடு தன்னை மறந்து சொனனதைச் சொல்லுதம்மா உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை  ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை  உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை  ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி - அந்த  மயக்கத்திலே பாடுதே ஊஞ்சலாடி வாசல் ஒன்றிருக்கும் வாசல் ஒன்றிருக்கும்  ஆசை கொணட நெஞ்சம்தனில் வழி இரண்டிருக்கும்  கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி அந்தக்  கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சலாடி

நீயும் பொம்மை நானும் பொம்மை - திரைப்படம்: பொம்மை

பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் இசை: வீணை பாலச்சந்தர் நீயும் பொம்மை நானும் பொம்மை நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை - அதைக் கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை (நீயும்) வல்லவன் கையில் நல்லவன் பொம்மை உள்ளவன் முன் இல்லதவன் பொமமை அல்லும் பகலும் உழைப்பவன் பொமமை - தினம் அல்லல்படடு அலைபவன் பொம்மை (நயும்) விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை வீசும் புயலில் உலகமே பொம்மை சதியின் முன்னே தர்மமும் பொம்மை - வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை இன்பச் சோலையில் இயற்கை பொமமை - அந்த இயற்கை அமைப்பில் எதுவும் பொம்மை

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் - திரைப்படம்: அபூர்வ ராகங்கள்

பாடியவர்: வாணி ஜெயராம் ஆ......... ஆ........... ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (ஏழு) காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆ..... காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (ஏழு) எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஆ......... எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் - நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று நமக்காக நம் கையால் செய்வது நன்று ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆ......... ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்ல

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? - திரைப்படம்: புதிய பறவை

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே ஓ இறைவன் கொடியவனே எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே ஓ உறங்குவேன் தாயே எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அ

கா கா கா - திரைப்படம்: பராசக்தி

பாடியவர்: சி.எஸ். ஜெயராமன் இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி இசை: ஜி. ராமநாதன் கா கா கா கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க என்ற அனுபவப் பொருள் விளங்க - அந்த அனுபவப் பொருள் விளங்க - காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க அண்ணாவே நீங்க அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க - காக்காவென ஒண்ணாகக் கூடுறீங்க - வாங்க கா கா கா சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க - உயிர் காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க - உயிர் காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே  தாரணி மீதிலே பாடுங்க - பாடும் கா கா கா எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் திரைப்படம்: பாலே பாண்டியா ஆ. ஆ.. ஆ.. நீயே உனக்கு என்றும் நிகரானவன்   நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ... வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை கருணை கருணை கருணை கருணை வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை வ்டிவாகி முடிவற்ற முதலான இறைவா நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ... துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா - வெறும் தூபத்தின் உன் இதயம் மயங்காதையா துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா - வெறும் தூபத்தின் உன் இதயம் மயங்காதையா விதி கூட உன் வடிவை நெருங்காதையா விதி கூட உன் வடிவை நெருங்காதையா வினை வென்ற மனம் கொண்ட இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வமலர் நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...

வாராயோ வெண்ணிலாவே

பாடியவர்: ஏ.எம். ராஜா, ஜிக்கி இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ் திரைப்படம்: மிஸ்ஸியம்மா வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான் அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான் சதிபதி விரோத மிகவே சிதைந்தது இதந்தரும் வாழ்வே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம் வாராயோ வெண்ணிலாவே தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது தமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது வாராயோ வெண்ணிலாவே அனுதினம் செய்வார்மோடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார்மோடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

பாடியவர்: பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் இயற்றியவர்: கண்ணதாசன் இசை: கே.வி. மகாதேவன் திரைப்படம்: திருவிளையாடல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல் பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல் இந்தப் பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல் - வண்ண தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல் தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே தான் பறந்து ஆட்சி செய்து தளிர்மணித் தென்றல் - அது வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல் வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல் பொதிக

கண்ணா கருமை நிறக் கண்ணா

பாடியவர்: பி. சுசீலா இயற்றியவர்: கண்ணதாசன் இசை: கே.வி. மகாதேவன் திரைப்படம்: நானும் ஒரு பெண் கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை காணாத கண்ணில்லையே கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை - என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை - என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை காணாத கண்ணில்லையே மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா  இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா - நல்ல இடம் பார்த்து நிலையாக அமர்ந்தாய் கண்ணா கண்ணா கருமை நிறக் கண்ணா - உன்னை காணாத கண்ணில்லையே பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா - அதில் பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா - அதில் பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா கண் பார்க்க முடியாமல்

கண்ணன் ஒரு கைக்குழந்தை

பாடியவர்: ஜேசுதாஸ் பி. சுசீலா இசை: இளையராஜா திரைப்படம்: பத்ரகாளி கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்க கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்துப் பாடுகிறேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ? உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ? ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா வாழ்விருககும் நாள் வரைக்கும் தஞ்சம் உன்தன் நெஞ்சமம்மா அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளை இது உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது காயத்ரி மந்திரத்தை உச்சரிககும் பக்தனம்மா கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்துப் பாடுகிறேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ ஆராரிர

சித்திரம் பேசுதடி

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் திரைப்படம்: சபாஷ் மீனா சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி என்தன் சிந்தை மயங்குதடி  சித்திரம் பேசுதடி முத்துச் சரங்களைப் போல் முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி சித்திரம் பேசுதடி என்தன் சிந்தை மயங்குதடி  சித்திரம் பேசுதடி தாவும் பொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே தாவும் பொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே பாவையுன் பேரெழிலே என்தன் ஆவலைத் தூண்டுதடி பாவையுன் பேரெழிலே என்தன் ஆவலைத் தூண்டுதடி சித்திரம் பேசுதடி என்தன் சிந்தை மயங்குதடி  சித்திரம் பேசுதடி என் மனம் நீயறிவாய் உன்தன் எண்ணமும் நானறிவேன் இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே சித்திரம் பேசுதடி என்தன் சிந்தை மயங்குதடி  சித்திரம் பேசுதடி

காற்று வெளியிடைக் கண்ணம்மா

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் காற்று வெளியிடைக் கண்ணம்மா  கண்ணம்மா ஆ. ஆ.. ஆ... காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் அமுதூற்றினை ஒத்த இதழ்கழும் இதழ்களும் ஆ... ஆ.. ஆ.. அமுதூற்றினை ஒத்த இதழ்களும் நிலவூறித் ததும்பும் விழிகளும் பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் ஆ...... பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் - இந்த வையத்த்துள் யானுள்ள மட்டிலும் - எனை வேற்று நினைவின்றித் தேற்றியே இங்கோர் விண்ணவனாகப் புரியுமே - எனை வேற்று நினைவின்றித் தேற்றியே இங்கோர் விண்ணவனாகப் புரியுமே - இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் நீயெனதின்னுயிர்க் கண்ணமமா ஆ.. நீயெனதின்னுயிர்க் கண்ணம்மா - எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் நீயெனதின்னுயிர்க் கண்ணம்மா - துயர்  போயின துன்பங்கள் நின்னைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே - துயர்  போயின துன்பங்கள் நின்னைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே என்றன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே கண்ணம்மா கண்ணம்மா  கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே என்றன் வாயினிலே அமுதூற

ஓடி விளையாடு பாப்பா

பாடியவர்: திருச்சி லோகநாதன் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: ஜி. ராமநாதன் திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ஓடி விளையாடு பாப்பா கூடி விளையாடு பாப்பா கூடி விளையாடு பாப்பா - ஒரு குழந்தையை வையாதே பாப்பா ஓடி விளையாடு பாப்பா பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்த பசு மிக நல்லதடி பாப்பா வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும் புறஞ்சொல்லலாகாது பாப்பா பொய் சொல்லக் கூடாது பாப்பா  தெய்வம் நமக்குத் துணை பாப்பா  தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா காலை எழுந்தவுடன் படிப்பு அச்சம் தவிர் ஆண்மை தவறேல் இளைத்தல் இகழ்ச்சி ஈகைத் திறன் பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய் தருவாய் நலமும் தகமும் புகழும் தவமும் திறனும் தனமும் கனமும் ஜாதிகள் இல்லையடி பாப்பா ஜ

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பாடியவர்: திருச்சி லோகநாதன் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: ஜி. ராமநாதன் திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம் என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்றெமதன்னை கை விலங்குகள் போகும் என்றெமதன்னை கை விலங்குகள் போகும் என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ? பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ? பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ? பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ? தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ? தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ? தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: ஜி. ராமநாதன் திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் பாடியவர்: திருச்சி லோகநாதன் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? கருகத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ? மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ? நெஞ்சில் உரமுமின்றி  சீர்காழி கோவிந்தராஜன் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும் செப்பித் திரிவாரடி

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

பாடியவர்: பி. சுசீலா இயற்றியவர்: கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் திரைப்படம்: பாகப்பிரிவினை தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ? சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே மாற்றம் காண்பதுண்டோ? மாற்றம் காண்பதுண்டோ? தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ? கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா? கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா? - இரு கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா? காதல் தரவில்லையா? தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ? காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன் காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன் உயர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் வாழ்வின் சுவை கூறுவேன் வாழ்வின் சுவை கூறுவேன் தங்கத்திலே

ஏன் பிறந்தாய் மகனே

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கண்ணதாசன் திரைப்படம்: பாகப்பிரிவினை ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும் காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? மண் வளர்த்த பொறுமையெல்லாம் மனதில் வளர்த்தவளாய் கண்மலர்ந்த பொன்மயிலை நானடைந்தேன் நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை தாய் மனதைக் காத்திருப்பேன் தங்க மகனே நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை தாய் மனதைக் காத்திருப்பேன் தங்க மகனே ஆராரோ ஆ

ஞாயிறு என்பது கண்ணாக

பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு ஊருக்குத் துணையாய் நானிருக்க  எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற  மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன் உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற  மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன் ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் உனனிடம் மனதைக் கொடுத்திருந்தேன் பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய பதிலைக் கொடுக்க வந்தேன் ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு ம்ம்ம்ம்ம்...