நகர்கிறேன், பேருந்துடன் நானும். என் நிகழ்கால வலியில் இருந்து வெகு தூரம் பயணிக்கிறேன். அதுவரை என்னை பிய்த்துதெடுத்த எடுத்த மன இருக்கங்கள், ஜன்னலோர மரங்களாய் பின்னோக்கி ஓடின. விழியன் வாசல் மெல்ல நனைந்திட, ஆறுதல் வந்தென்னை அன்புடன் அணைத்துக்கொண்டது.
சகபயணிகளின் கூச்சலையும், சாலையின் புழுதியையும் தாண்டி... வானொலியின் அலைவரிசை என்னை சூழ்ந்திருக்க, வேண்டா விடுதலையாய் வந்துவிடும் நான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம்.