பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா - நானும்
உன் பழி கொண்டேனடா - நானும்
உன் பழி கொண்டேனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா - கர்ணா
மன்னித்து அருள்வாயடா - கர்ணா
மன்னித்து அருள்வாயடா
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவ் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா
Comments
Post a Comment