பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
திரைப்படம்: பாலே பாண்டியா
ஆ. ஆ.. ஆ..
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை
கருணை கருணை கருணை கருணை
வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை
வ்டிவாகி முடிவற்ற முதலான இறைவா
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா - வெறும்
தூபத்தின் உன் இதயம் மயங்காதையா
துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா - வெறும்
தூபத்தின் உன் இதயம் மயங்காதையா
விதி கூட உன் வடிவை நெருங்காதையா
விதி கூட உன் வடிவை நெருங்காதையா
வினை வென்ற மனம் கொண்ட இனம்
கண்டு துணை சென்று வென்ற தெய்வமலர்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
Comments
Post a Comment