Skip to main content

கடந்த பொங்கலன்று என் மனப்பானையின் பொங்கல்:

உழவனை நினைந்து சில வரிகள்:

(விழாவில் என் சக ஊழியர்களுடன் பகிந்து கொண்டது)

விதைத்தெல்லாம் விருந்தாகும் அறுவடைத்திருநாள்.
வருடமெல்லாம் காத்திருந்த தைத்திங்கள் முதல் நாள்.
தித்திக்கும் பெயர் கொண்ட தனித்திருபெருநாள்.
புத்தாண்டு என்ற புதுநாமம் சூடிக்கொண்ட பொங்கல் நன்நாள்.


வந்தது! வந்தது!
உழவனை நினைவூட்டி நின்றது.


மண்ணோடு விளையாடும் மறவனாம் உழவன்,
புவியோரின் பசிப்பிணி போக்கும் தலைவன்.
எருதுவும் மண்புழுவும் தோழர்களாய் துணைநிற்க,
கலப்பைதனை கையில் கொண்ட கண்கண்ட கடவுளவன்.


நன்றி சொல்லவேண்டுமோ அவனுக்கு இந்நாளிலே...
என்ற ஐயம் எழ ...
வேண்டாம் என்றே தோன்றியது எனக்கு.
மண்ணில் நெல் விதைப்பவர்கள் மட்டுமல்ல உழவர்கள்.
மனதில் அறிவை விதைக்கும் நாமும் தான்.


இந்நாள் மட்டும் உழவன் என்று சொல்லிக்கொள்ள உளமார விழைகிறேன்.
நீங்கள்?


பகலவனுக்கு என் படையல்:

கதிரவன் முளைத்தான்

ஒளி பிறந்தது.

கதி அவன் என்றோம்

கதிர் விளைந்தது.


இம்மன்னில் பிறந்தோம்!

பண்பை மறவோம்!


இந்நாளிலே...

நன்றி நவில்வோம் பகலவனுக்கு.

விழாஎடுப்போம் உழவனுக்கு.


உழவனின் பார்வையில்...


சிந்திய வியர்வைத்துளிகள் நெல் மணிகளாய் கண்முன்னே!

அறுவடை செய்து தந்தை பொருளீட்ட...

தைவந்தால் திருமணம் என வளர்ந்த கன்னி மகள் கண் முன்னே!

உழைத்த ஊனெல்லாம் பூரித்து மகிழ்வுர

கண்ட கனவை மெய்பித்து தந்த கதிரவனுக்கு

கரும்பு பொங்கல் மஞ்சள் குருத்து படைத்து

நன்றி சொல்லிட தைப்பொங்கல் வந்தாச்சு.

Comments

  1. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_30.html

    நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: ஜி. ராமநாதன் திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் பாடியவர்: திருச்சி லோகநாதன் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? கருகத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ? தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ? மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ? நெஞ்சில் உரமுமின்றி  சீர்காழி கோவிந்தராஜன் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும் செப்பித் திரிவாரடி

காசே தான் கடவுளப்பா

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் திரைப்படம்: சக்கரம் காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா - அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும் களவுக்குப் போகும் பொருளை எடுத்து வறுமைக்குத் தந்தால் தருமமடா களவுக்குப் போகும் பொருளை எடுத்து வறுமைக்குத் தந்தால் தருமமடா பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தால

tharai mel pirakka vaithaan lyrics-padagotti tamil song lyrics

தரை மேல் பிறக்க வைத்தான் (படகோட்டி) குரல்: டி எம் சௌந்தரராஜன் வரிகள்: வாலி தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக் கண்ணீரில் துடிக்க வைத்தான் தரை மேல் பிறக்க வைத்தான் கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவைக் கொடுத்தவர் அங்கே அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு (2) முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை இதுதான் எங்கள் வாழ்க்கை (தரை மேல்) கடல் நீர் நடுவே பயணம் போனால் குடினீர் தருபவர் யாரோ தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ ஒருனாள் போவார் ஒருனாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் (2) அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ஊரார் நினைப்பது சுலபம் (தரை மேல்)