பாச மலர் - விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: | மலர்ந்தும் மலராத பாதி மலர் போல |
குரல்: | டி எம் சௌந்தரராஜன், சுசீலா |
வரிகள்: | கண்ணதாசன் |
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
(மலர்ந்து)
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாலப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா...
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்கமுடியாதடா
ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
Comments
Post a Comment