Skip to main content

Posts

எங்கிருந்தோ வந்தான் - திரைப்படம்: படிக்காத மேதை

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே   என்னதவன் செய்து விட்டேன் இங்கிவனை யான் பெறவே   என்னதவன் செய்து விட்டேன் - கண்ணன் எங்கிருந்தோ வந்தான் சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான் சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான் கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான்  வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே  என்னதவன் செய்து விட்டேன் - கண்ணன் எங்கிருந்தோ வந்தான் பற்று மிகுந்து வரல் பார்க்கின்றேன் கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய்  பார்வையிலே சேவகனாய் - ரங்கன் எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் இங்கிவனை யான் பெறவே  என்னதவன் செய்து விட்டேன் ரங்கன் எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்  எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

ஆடியடங்கும் வாழ்க்கையடா - திரைப்படம்: நீர்க்குமிழி

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! ஆடி அடங்கும் வாழ்க்கையடா முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா - கண் மூடினால் காலில்லாக் கட்டிலடா! ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! ஆடி அடங்கும் வாழ்க்கையடா பிறந்தோம் என்பதே முகவுரையாம் பேசினோம் என்பதே தாய்மொழியாம் மறந்தோம் என்பதே நித்திரையாம் மரணம் என்பதே முடிவுரையாம் ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! ஆடி அடங்கும் வாழ்க்கையடா சிரிப்பவன் கவலையை மறக்கின்றான் தீமைகள் செய்பவன் அழுகின்றான் இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்! ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! ஆடி அடங்கும் வாழ்க்கையடா வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைத்ததில்லை தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

உலவும் தென்றல் காற்றினிலே

பாடியவர்: திருச்சி லோகநாதன் திரைப்படம்: மந்திரி குமாரி உலவும் தென்றல் காற்றினிலே உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே அலைகள் வந்து மோதியே ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே அலைகள் வந்து மோதியே ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே இதயம் அந்த மலைக்கு ஏது அன்பைக் காட்டவே? இதயம் அந்த மலைக்கு ஏது அன்பைக் காட்டவே? தெளிந்த நீரைப் போல தூய காதல் கொண்டோம் நாம் களங்கம் அதிலும் காணுவாய் களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார் குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ? குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ? உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோணிதனில் ஊர்ந்து செல்லுவோம் உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோணிதனில் ஊர்ந்து செல்லுவோம்

வெள்ளிப் பனி மலையின்

பாடியவர்: திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: ஜி. ராமநாதன் திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள் பாரத தேசமென்று ...

அடிக்கிற கைதான் அணைக்கும்

பாடியவர்: திருச்சி லோகநாதன் அடிக்கிற கைதான் அணைக்கும்  அணைக்கிற கைதான் அடிக்கும் இனிக்கிற வாழ்வே கசக்கும்  கசக்கிற வாழ்வே இனிக்கும் புயலுக்குப் பின்னே அமைதி - வரும்  துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி புயலுக்குப் பின்னே அமைதி - வரும்  துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி புயலுக்குப் பின்னே அமைதி - வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி இருளுக்குப் பின் வரும் ஜோதி இதுதான் இயற்கை நியதி இருளுக்குப் பின் வரும் ஜோதி இதுதான் இயற்கை நியதி இதுதான் இயற்கை நியதி அடிக்கிற கைதான் அணைக்கும் - பலே அணைக்கிற கைதான் அடிக்கும் இனிக்கிற வாழ்வே கசக்கும் கசக்கிற வாழ்வே இனிக்கும் அடிக்கிற கைதான் அணைக்கும் இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி இடிக்கிற வானம் கொடுக்கும் இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி இடிக்கிற வானம் கொடுக்கும் இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி இடிக்கிற வானம் கொடுக்கும் விதைக்கிற விதை தான் முளைக்கும் இதுதான் இயற்கை நியதி - ஹுக் விதைக்கிற விதை தான் முளைக்கும் இதுதான் இயற்கை நியதி இதுதான் இயற்கை நியதி அடிக்கிற கைதான் அணைக்கும் அணைக்கிற கைதான் அடிக்கும் இனிக்கிற வாழ்வே கசக்கும் கசக்கிற...

ஆசையே அலைபோலே

பாடியவர்: திருச்சி லோகநாதன் ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார் நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததேன் வடிவம் மட்டும் வாழ்வதேன் இளமை மீண்டும் வருமா? மணம் பெறுமா? முதுமையே சுகமா? காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே சூரைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ? வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே ஆ..ஆ..

வளர்ந்த கலை மறந்து விட்டாள் - திரைப்படம்: காத்திருந்த கண்கள்

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் பி. சுசீலா இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா - அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா? குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா - அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா? வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா? - தாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா? காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்த காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா? மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா? - அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா? தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா? - அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா? - அதை நீ பிறந்த பின்ப...