Skip to main content

Posts

Showing posts with the label தமிழ் பாடல் வரிகள்

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு திரைப்படம்: அன்னையின் ஆணை பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி பெற வைத்தாள் மேதினியில் நாம் வாழ செய்தாள் அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை - அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே ஏ..ஆ... துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே - நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள் மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள் ஆஆஆஆ.. அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

இரவு வரும் பகலும் வரும்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் திரைப்படம்: இரவும் பகலும் இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான் பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான் வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஒன்று தான் இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான் இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான் தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்று தான் பயணம் ஒன்று தான் இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் விழி இரண்டு இருந்த போதும் பார்வை ஒன்று தான் பார்வை ஒன்றுதான் வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான் வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான் தெய்வம் ஒன்று தான் இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் உறவு வரும் பகை

காசே தான் கடவுளப்பா

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் திரைப்படம்: சக்கரம் காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா - அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும் களவுக்குப் போகும் பொருளை எடுத்து வறுமைக்குத் தந்தால் தருமமடா களவுக்குப் போகும் பொருளை எடுத்து வறுமைக்குத் தந்தால் தருமமடா பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தால

ஓராயிரம் பார்வையிலே

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் திரைப்படம்: வல்லவனுக்கு வல்லவன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் இந்த மானிடர் காதலெல்லாம் - ஒரு மரணத்தில் மாறிவிடும் அந்த மலர்களின் வாசமெல்லாம் - ஒரு மாலைக்குள் வாடிவிடும் - நம் காதலின் தீபம் மட்டும் - எந்த நாளிலும் கூட வரும் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் இந்தக் காற்றினில் நான் கலந்தே - உன் கண்களைத் தழுவுகின்றேன் - இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் - உன் ஆடையில் ஆடுகின்றேன் - நான் போகின்ற பாதையெல்லாம் - உன் பூ முகம் காணுகின்றேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்

பரமசிவன் கழுத்திலிருந்து

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் திரைப்படம்: சூரியகாந்தி பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா - யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது - அதில் அர்த்தம் உள்ளது உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா - யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது - அதில் அர்த்தம் உள்ளது வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் உனைப் போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தாலும் தாழ்ந்தாரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே - நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என்னுள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது இது

Oru koppaiyile en kudiyiruppu - பாடல்: பஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

Movie: Ratha thilagam - திரைப்படம்: ரத்தத் திலகம் Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன் Year: - ஆண்டு: 1963 ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் நான் காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் பாமர ஜாதியில் தனி மனிதன் நான்படைப்பதனால் என் பேர் இறைவன் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப

theertha karaiyinile lyrics-varumaiyin niram sivappu/தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில்

Movie Name: Varumaiyin Niram Sivappu (1980) Singer: Balasubrahmanyam SP Music Director: Viswanathan MS Lyrics: Kannadasan Year: 1980 Producer: Venkatraman R Director: Balachandar K Actors: Kamal Hassan, Sridevi தீர்த்தக் கரையினிலே தெற்கு படம் : வறுமையின் நிறம் சிவப்பு இசை : எம் எஸ் விஸ்வனாதன் பாடல்: தீர்த்தக் கரையினிலே குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம் வரிகள்: சுப்ரமணிய பாரதி தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி பாவை தெரியுதடி (தீர்த்தக்) மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ (2) (தீர்த்தக்)

en vaanile lyrics-jhonny tamil song lyrics/ என் வானிலே ஒரே வெண்ணிலா

Movie Name: Jhonny (1980) Singer: Jency Music Director: Ilayaraja Lyrics: Kannadasan Year: 1980 Actors: Rajnikanth, Sridevi என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதைத் தாரகை ஊர்வலம்... (என் வானிலே) நீரோடை போலவே என் பெண்மை நீராட வந்ததே என் மென்மை சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே வார்தைகள் தேவையா...ஆஆஆஆ (என் வானிலே) நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவோ (என் வானிலே)

sippiyirukkuthu lyric - varumaiyin niram sivappu tamil song lyrics/ சிப்பியிருக்குது முத்துமிருக்குது

Movie Name: Varumaiyin Niram Sivappu (1980) Singer: Balasubrahmanyam SP, Janaki S Music Director: Viswanathan MS Lyrics: Kannadasan Year: 1980 Producer: Venkatraman R Director: Balachandar K Actors: Kamal Hassan, Sridevi தந்தன தத்தன தையன தத்தன தனன தத்தன தான தையன தந்தானா ஆஹா சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி லல்ல லலலல்ல லல்ல லலலல்ல லல்ல லலலல்ல லாலல்லல்ல லாலாலா சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி எப்படி? ம்? சந்தங்கள் நாநநா நீயானா ரிஸரி சங்கீதம் ம்ம்ம் நானாவேன் சந்தங்கள் நீயானா சங்கீதம் நானாவேன் சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி தா....... சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி ஹஹா. னனனனனா Come on. Say it once again! னனனனனா ம்... சிரிக்கும் சொர்க்கம் தரனனா தரரனானா தங்கத்தட்டு எனக்கு மட்டும் OK? தாரே தாரே தானா அப்படியா? தேவை பாவை பார்வை தத்தனதன

paruvame pudhiya paadal lyrics-nenjathai killaathe tamil song lyrics/பருவமே புதிய பாடல் பாடு

Movie Name:Nenjathai killaathe Song Name:Paruvame pudhiya paadal Singers:S.P.Balasubramanium,S.Janaki Music Director:Ilaiyaraja Year of release:1980 பருவமே புதிய பாடல் பாடு பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம் இளமையின் பூந்தென்றல் ராகம் பருவமே புதிய பாடல் பாடு பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா சிரிக்கிறாய் ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா சிவக்கிறாள் ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி தீபங்கள் போலாடும் பார்வை சேரும் பருவமே புதிய பாடல் பாடு தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ அழைக்கிறான் ஹோ ஹோ நடிக்கிறான் தோழன் அணைக்கிறான் ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி காலங்கள் பொன்னாக மாறும் நேரம் பருவமே புதிய பாடல் பாடு பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம் இளமையின் பூந்தென்றல் ராகம் பருவமே புதிய பாடல் பாடு

tharai mel pirakka vaithaan lyrics-padagotti tamil song lyrics

தரை மேல் பிறக்க வைத்தான் (படகோட்டி) குரல்: டி எம் சௌந்தரராஜன் வரிகள்: வாலி தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக் கண்ணீரில் துடிக்க வைத்தான் தரை மேல் பிறக்க வைத்தான் கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவைக் கொடுத்தவர் அங்கே அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு (2) முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை இதுதான் எங்கள் வாழ்க்கை (தரை மேல்) கடல் நீர் நடுவே பயணம் போனால் குடினீர் தருபவர் யாரோ தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ ஒருனாள் போவார் ஒருனாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் (2) அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ஊரார் நினைப்பது சுலபம் (தரை மேல்)

mannavane azhalaama lyrics-karpagam tamil song lyrics/ மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா

Movie Name:Karpagam Song Name:Mnnavane azhalaama Singer:P.Susheela Music Director:M.S.V-Ramamoorthi Lyricist:Vaali மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க மன்னவா மன்னவா மன்னவா சரணம் ௧: கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா கண்ணெடுத்து பாராமல் கலங்குவதும் நீயல்லவா சரணம் ௨ உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா என் உடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு

sonnathu neethaana sol sol en nenje lyrics-nenjil or aalayam tamil song lyrics

சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே ஏன் ஏன் ஏன் என் உயிரே சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே என்னொரு கைகளிலே யார் யார் யார் நானா எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே மங்கள மாலை குங்குமம யாவும் தந்ததெல்லாம் நீ தானே மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீ தானே என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீ தானே இறுதி வரை துணை இருப்பேன் என்றதும் நீ தானே இன்று சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

kodi asainthathum kaattru lyrics-parthaal pasi theerum tamil song lyrics/ கொடி அசைந்ததும் காற்று வந்ததா

Movie Name:Parthal pasi theerum Song Name:Kodi asainthathum Singers:T.M.Soundar Rajan,P.Susheela Music Director;M.S.Viswanathan Lyrics:Kannadhasan கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா? நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா? மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா? (கொடி..) பாடல் வந்ததும் தாளம் வந்ததா? பாடல் வந்ததும் தாளம் வந்ததா? தாளம் வந்ததும் பாடல் வந்ததா? பாவம் வந்ததும் ராகம் வந்ததா? பாவம் வந்ததும் ராகம் வந்ததா? ராகம் வந்ததும் பாவம் வந்ததா? கண் திறந்ததும் காட்சி வந்ததா? காட்சி வந்ததும் கண் திறந்ததா? பருவம் வந்ததும் ஆசை வந்ததா? ஆசை வந்ததும் பருவம் வந்ததா? (கொடி..) வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா? வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா? வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா? பெண்மை என்பதான் நாணம் வந்ததா? பெண்மை என்பதால் நாணம் வந்ததா? நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா? ஓடி வந்ததும் தேடி வந்ததும் பாடி வந்ததும் பார்க்க வந்ததும் காதல் என்பதா? பாசம் என்பதா? கருணை என்பதா? உரிமை என்பதா? (கொடி..)

vantha naal mudhal lyrics-paava mannippu tamil song lyrics

இசை :விஸ்வனாதன்-ராமமூர்த்தி குரல்: டி எம் சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் நீரும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2) நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய் நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம் ஜாதியும் பேதமும் கூறுவார் - அது வேதன் விதியென்றோதுவார் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் (வந்த நாள்) பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2) பாயும் மீன்களில் படகினைக்கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2) மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் (வந்த நாள்) இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி பாரில் இயற்கை படைத்ததையெல்லாம் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் ம் ஹ்ம் ம் ஹ்ம் (வந்த நாள்)

malarnthum malaraatha lyrics-paasa malar tamil song lyrics

பாச மலர் - விஸ்வனாதன்-ராமமூர்த்தி பாடல்: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல குரல்: டி எம் சௌந்தரராஜன், சுசீலா வரிகள்: கண்ணதாசன் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலரும் விழிவண்ணமே - வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விடிந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே - வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே (மலர்ந்து) யானைப் படை கொண்டு சேனை பல வென்று வாழப் பிறந்தாயடா புவியாலப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு... அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக... மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா... பிரித்த கதை சொல்லவா கண்ணில் மணி போல மணியில் நிழல் போல கலந்து பி

adho andha paravai pola vaazha vendum lyrics-aayirathil oruvan tamil song lyrics/ அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

Movie Name:Aayirathil oruvan, Song Name:Adho antha paravai pola, Singer:T.M.Soundhar Rajan, Music Director:M.S.Viswanathan அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் லல்லா லா ல. லல்லா லா ல. லல்லா லா ல. லல்லா லா ல. காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் அதோ அந்த பறவைபோல தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே போகும்போது வேறு பாதை போகவில்லையே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல

anbulla maan vizhiye lyrics-kuzhandhaiyum dheivamum tamil song lyrics/ அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்

Movie Name : Kuzhanthaiyum Dheivamum, Singers : TMS, PS, LyricS : Kannadasan, Music Director: M.S.Viswanathan, Actors : Jaishankar, Jamuna, அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் - நான் எழுதுவதென்னவென்றால் - உயிர்க் காதலில் ஓர் கவிதை அன்புள்ள மன்னவனே ஆசையில் ஓர் கடிதம் - அதைக் கைகளில் எழுதவில்லை - இரு கண்களில் எழுதி வந்தேன் நலம் நலம்தானா முல்லை மலரே சுகம் சுகம்தானா முத்து சுடரே இளைய கன்னியின் இடை மெலிந்ததோ எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ வாடைக் காற்றிலே வாடி நின்றதோ (அன்புள்ள ) நலம் நலம்தானே நீ இருந்தால் சுகம் சுகம் தானே நினைவிருந்தால் இடை மெலிந்து இயற்கையல்லவா நடை தளர்ந்து நாணம் அல்லவா வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா வாழ வைத்ததும் உண்மை அல்லவா (அன்புள்ள )

unnai solli kutramillai lyrics-kulamagal raadhai tamil song lyrics/ உன்னைச் சொல்லி குற்றமில்லை

Movie: Kulamagal raadhaiSong:Unnaich solli kutramillaiSingers:T.M.Soundhar RajanMusic Director:Kannadhaasan உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி (உன்னை ) மயங்க வாய்த்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை நினைக்க வாய்த்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை (உன்னை ) உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய் கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதை தவிக்க விட்டான் இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி (உன்னை )

Soorya gandhi - Song Naan endrall - SPB & LRE - Music: MSV - Lyrics: Vaali

நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் YEAH THE WHOLE TRUE நான் சொன்னால் அது அவளின் வேதம் அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம் AND NOTHING BUT TRUTH அதுதான் என் எண்ணம் நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் கட்டிய கணவன் கட்டளைப்படியே காரியமாற்றும் குணமுடையாள் நான் செய்த முடிவை தான் செய்த முடிவாய் நினைத்தே பார்க்கும் மனமுடையாள் IN THOUGHT WORD AND DEED நான் செய்த முடிவை தான் செய்த முடிவாய் நினைத்தே பார்க்கும் மனமுடையாள் SUCH A NOBLE HEART புருஷனுக்கருகே சரிசமமாக அமர்ந்திடத் தயங்கும் பண்புடயாள்..ஹா HO THERE HE GOES AGAIN கடவுளின் மேலாய் கணவனை மதித்து வணங்கிடும் இனிய அன்புடயாள் HMMMM GOD BLESS ME இனிய அன்புடயாள் நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து நடந்தாள் ராஹவன் தலைவி REMEMBER WHAT HAPPENED TO HER கணவன் கிழித்த கோட்டை கடந்து அறியாள் அடியேன் மனைவி YES ALWAYS URS SINCERELY கொண்டவன் வீடு குடிசையென்றாலும் மாளிகைபோலே நினைப்பாளே O ...